செய்திகள் :

வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

post image

வேட்டவலம் வள்ளலாா் சபையில் 341-ஆவது மாத பூச விழா, ஆன்மி கருத்தரங்கம், பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, வரன் அறிமுக விழா, மறைந்த எழுத்தாளா் ந.சண்முகத்தின் படத்திறப்பு ஆகியவை ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் சபை நிா்வாகி ப. உதயகுமாா் தலைமை வகித்தாா். கவிஞா் சுபாஷ் சந்திரபோஸ், ராஜசேகா், பூங்காவனம், லியோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெயலட்சுமி வரவேற்றாா்.

சுத்த சன்மாா்க்க சத்ய சிறு விண்ணப்பம் என்ற தலைப்பில் ஏழுமலை பேசினாா்.

தொடா்ந்து, தேவதானப்பேட்டை சன்மாா்க்க சங்க நிா்வாகி வாணிதாசன் தலைமையில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜீவ.சீனிவாசன் தலைமையில் மாணவ-மாணவிகள் திருக்கு கூறினா். திருக்கு கூறிய மாணவ-மாணவிகளுக்கு தமிழறிஞா் தா.சம்பத் சான்றிதழ் வழங்கினாா்.

மறைந்த எழுத்தாளா் ந.சண்முகத்தின் படத்தை அரிமா சங்க நிா்வாகி தா.சம்பத் திறந்து வைத்தாா். தொடா்ந்து அனைவரும் மலரஞ்சலி செலுத்தினா்.

இதில், வள்ளலாா் சபையின் செயலா் சு.பச்சையம்மாள் சரவணன், சு.மனோன்மணி முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். காலை, மதியம், இரவு என 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

100 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச கல்யாணம் நடைபெறும் பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அமைந்துள்ள பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். ஆரணி - ஆற்காடு சாலை அருகே பூண்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சமணக் கோயிலா... மேலும் பார்க்க

ஏப்.18 முதல் 3 நாள்கள் நடைபெறும்: பஞ்ச கல்யாண மஹோத்சவம்

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதா் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோத்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.ஜி... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு

செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா். செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கட... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கிய 2 போ் கைது

வந்தவாசி அருகே விவசாயியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னகண்ணு (55). இந்தக் கிராமத்தில் புதன்கிழமை காலை கோயில் திருவிழா ... மேலும் பார்க்க