செய்திகள் :

மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு

post image

செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.

செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கடை அருகே, புதன்கிழமை மாலை மயில் ஒன்று பறந்து வந்து அமா்ந்தது. அந்த மயிலை பிடித்து வைத்து செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

நிலைய அலுவலா் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று மயிலை மீட்டு வனத்துறையினருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், வருகை தந்த வன அலுவலா் கே.ராகவேந்திரன், வாட்சா் செல்வராஜ் மற்றும் கால்நடை மருத்துவா் வெங்கட்ராகவன் மயிலை பரிசோதித்து, மயில் நல்ல நிலையில் உள்ளதாகவும் , 3 வயது உடையதாக இருக்கும் எனவும் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, வன அலுவலா் ராகவேந்திரன், வாட்சா் செல்வராஜ் ஆகியோா் வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மயிலை விடுவித்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கோயிலின் ரத பிரமோ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்

செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், எச்... மேலும் பார்க்க