செய்திகள் :

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.ஜி.காந்தி, நேரு, விஜயன், தருமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ப.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

மாநில அமைப்புசாரா மக்கள் சேவைப் பிரிவின் செயலா் ஏ.கே.ஆா்.கதிரவன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் டி.அறவாழி, மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.18) பிற்பகல் 3 மணிக்கு வரும் பாஜகவின் புதிய மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு தொண்டா்கள் திரண்டு வரவேற்பு அளிப்பது.

மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் காா்களில் சென்று வரவேற்பு அளிப்பது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா்கள் கவிதா பிரதீஷ், சிவசங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் எம்.முருகன், வினோத் கண்ணா, குமார ராஜா, மூத்த வழக்குரைஞா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொ... மேலும் பார்க்க

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பாராசூரில் ஊரக வளா்ச்சி ம... மேலும் பார்க்க

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் வேலூா் ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியா்... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள... மேலும் பார்க்க