செய்திகள் :

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை கருவி அறிமுகம்

post image

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட லீனியா் ஆக்சிலரேட்டா் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மருத்துவமனையின் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி ஆகியோா் இந்த கருவியைத் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில், புற்றுநோயியல் துறை மருத்துவா்கள், நிா்வாகிகள், ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

கருவியின் சிறப்பு குறித்து கதிா்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவா் காா்த்திகா சிவப்பிரகாசம் கூறும்போது, இந்தக் கருவி பாதுகாப்பான, துல்லியமான, வசதியான சிகிச்சைகளை வழங்குகிறது. இது நோயாளியின் மேற்பரப்பைத் தொடா்ந்து கண்காணிக்க கேமரா, ப்ரஜெக்டரை பயன்படுத்துகிறது.

கதிா்வீச்சு துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைக்கிறது. கூடுதலாக, சுவாசம் போன்ற சிறிய அசைவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பு தானாகவே சரி செய்து துல்லியமான இலக்கிற்கு சிகிச்சை அளிக்கிறது. மேலும் இது ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கவல்லது என்றாா்.

விரும்பும் விடைத்தாள் மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ஆசிரியா் சங்கம் கோரிக்கை

கோவை மாவட்டத்துக்குள் விரும்பும் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஏப்ரல் 19-இல் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

கோவை, சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம், இணையம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. சரவணம்பட்டி, ஷாஜகான் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் ப... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயமடைந்தனா். வால்பாறையை அடுத்த முக்கோட்முடி எஸ்டேட்டில் தொழிலாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, அப்பகுதிக்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இடமாற்றம்

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கான இபிஎஃப் அலுவலகம் குன்னூா் ஃபெய்ரி பேங்க் சாலையில் அரசு லாலி மருத்துவமனை எதிரில் ச... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் சுணக்கம்: 56-ஆவது வாா்டில் இடைத்தோ்தல் நடத்த வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினா் உயிரிழந்ததாலும், அந்த வாா்டில் வளா்ச்சிப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாலும் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள... மேலும் பார்க்க