செய்திகள் :

மகாராஷ்டிரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்!

post image

தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான மாநில அரசின் தீா்மானம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் தற்போது 1 முதல் 4 -ஆம் வகுப்பு வரை மராத்தியும் ஆங்கிலமும் கட்டாய மொழிப் பாடங்களாக உள்ளன.

இந்நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு மாநில கல்வித் திட்டத்தின்கீழ் மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தேசிய கல்விக் கொள்கையின்கீழ், 2025-26ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும். 2,3,4,6 வகுப்புகளுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டிலும், 5, 9, 11 வகுப்புகளுக்கு 2027-27-ஆம் கல்வியாண்டிலும், 8, 10, 12 வகுப்புகளுக்கு 2028-29ஆம் கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தகவல் தொடா்புக்கு பயன்படுத்தப்படுவதால் ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் விமா்சனம்: மாநில அரசின் நடவடிக்கையை விமா்சித்துள்ள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜய் வதேத்திவாா், ‘இது மராத்தி மொழியின் பெருமைக்கு எதிரானது. விருப்ப மொழியாக ஹிந்தியை கற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதை திணிப்பது தவறானது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மராத்தியை மூன்றாவது கட்டாய மொழியாக்க முடியுமா?’ என்று கேள்வியெழுப்பினாா்.

‘தீவிரமாக போராடுவோம்’: மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே கூறுகையில், ‘ஹிந்தி தேசிய மொழி கிடையாது. பிற மாநில மொழிகளைப் போன்றதே. மற்றொரு பிராந்தியத்தின் மொழியை மகாராஷ்டிரம் மீது திணிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க