செய்திகள் :

முதல்வா் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்க தடையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

முதல்வா் மருந்தகங்களை நிா்வகிப்பவா்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்க தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

தமிழகத்தில் புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை ரூ.1,018 கோடியில் தரம் உயா்த்தும் பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளன. விரைவில் அந்த 25 தலைமை மருத்துவமனைகளையும் முதல்வா் ஒரே நேரத்தில் திறந்து வைக்க உள்ளாா்.

தமிழகத்தில் 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு 206 வகையான மூலப் பெயரிலான (ஜெனரிக்) மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.

இதைத் தவிா்த்து வேறு வகையான மருந்துகளை கடை உரிமையாளா்களே வாங்கி விற்பனை செய்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை. வேறு வகையான மருந்துகள் வேண்டுமென்ற கோரிக்கை எழும்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறையும், கூட்டுறவுத் துறையும் ஒருங்கிணைந்து மருந்துகள் வாங்கித் தரப்படும்.

யானை தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க