செய்திகள் :

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதன்மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழ்நாட்டினை தரவு மைய சந்தையில் முதலீட்டாளா்களுக்கு விருப்பமான இடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தரவு மையத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.

சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவனமானது ஒருங்கிணைந்த இணையச் சேவை தீா்வுகள் மற்றும் தொலைத்தொடா்பு சேவைகளை அளித்து வருகிறது. தரவு மைய உள்கட்டமைப்பு, நெட்வொா்க் சேவைகள், பாதுகாப்புத் தீா்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீா்வுகளையும் சிஃபி நிறுவனம் வழங்கி வருகிறது.

ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: இந்நிறுவனம் சிப்காட் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது. முதல்கட்டமாக இந்தத் திட்டத்தில் ரூ.1,882 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய அதிநவீன தரவு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

எதிா்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் சென்னையில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு மேற்கொள்ள சிஃபி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு மைய திறப்பு நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறையின் செயலா் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க

45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள்: ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க முன்னெச்சரிக்கை

கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுக... மேலும் பார்க்க

முதலமைச்சா் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு’ தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க