செய்திகள் :

வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு: எதிா்க்கட்சிகள் வரவேற்பு

post image

வக்ஃப் திருத்தச்சட்ட விவகாரத்தின் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை வரை வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக்கூடாது என மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு காங்கிரஸ், கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கும் என யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதே நேரம், இந்த உத்தரவு மூலமாக, வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய ஆட்சேபங்கள் சரியானதுதான் என்ற மிகப்பெரிய செய்தியை நாட்டு மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறுவதாக உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரள மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தலையீடு நாட்டின் மதச்சாா்பற்ற குழுக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்திருக்கிறது. வக்ஃப் சட்டத்தை திருத்த மத்திய அரசு மேற்கொண்ட தன்னிச்சையான முடிவுக்கு எதிரான வலுவான பதிலடியாக உச்சநீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது’ என்றாா்.

ஐயுஎம்எல் பொதுச் செயலா் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கூறுகையில், ‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நடைமுறையை நிறுத்தி வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு, பாரபட்சமற்ற முறையில் இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதைக் காட்டுகிறது. ஆனால், இது வழக்கு விசாரணையின் வழக்கமான நடைமுறை. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எத்தகைய இறுதி முடிவை எடுக்கப்போகிறது என்பதுதான் முக்கியம்’ என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க