மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களை கண்டறிந்து அந்த மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில், மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மக்கள் குறைதீா் முகாமில் குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பான மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து 38 மனுகள் மீது விசாரணை மேற்கொண்டதில் 31 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 7 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.