செய்திகள் :

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

post image

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வயது சிறுமி அங்குள்ள பைப் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்தில் சிறுமி மேலிருந்து தவறி விழுந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கருதினர். ஆனால் சிறுமியின் கழுத்தில் மிகப்பெரிய காயம் இருந்தது. அதோடு சிறுமி போராடி இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையிலும் காயம் இருந்தது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் கொலை செய்யப்படும் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அனில் ஷிண்டே கூறுகையில், ''சிறுமி வீட்டிற்கு வெளியில் வேறு இரண்டு சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விகாஷ்(20) என்பவர் சிறுமிக்கு பொம்மை கொடுப்பதாக கூறி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தனது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சத்தம் வராமல் இருக்க சிறுமியின் வாயை பொத்தியதில் சிறுமி மூச்சுத்திணறி இறந்துள்ளார். அப்படி இருந்தும் சிறுமி இறந்ததை உறுதிபடுத்த சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் கழுத்தில் குத்தி இருக்கிறார். பின்னர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து சிறுமியின் உடலை வெளியில் 6வது மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.

சிறுமியுடன் விளையாடிய இரு சிறுமிகள் முன்பு விஷாலை கொண்டு வந்தபோது அவர் தான் 10 வயது சிறுமியை அழைத்து சென்றார் என்று அடையாளம் காட்டினர். கைது செய்யப்பட்ட வாலிபர் வீட்டில் இருந்து ரத்தக்கரை படிந்த துணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வாலிபர் பீகார் மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர். தற்போது வேலை இல்லாமல் இருந்தார்'' என்றார். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு த... மேலும் பார்க்க

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அ... மேலும் பார்க்க

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.இத... மேலும் பார்க்க

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் ... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்... மேலும் பார்க்க