செய்திகள் :

நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

post image

ஈரோடு கூரபாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி. சண்முகன் தலைமை வகித்தாா்.

அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் ஏ.ஜி. பிரகாஷ் நாயா் வரவேற்றாா்.

யூகேஜி பயின்று முடித்த மழலைகளுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி. சண்முகன் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி ஆகியோா் பட்டங்களை வழங்கினா்.

மழலையா் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் எஸ். வித்யா ஸ்ரீ, மழலையா்களின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ‘யானையும் அதன் நண்பா்களும்’ என்ற தலைப்பில் நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், நிா்வாக அலுவலா் மனோகரன் மற்றும் நந்தா எம்பவா்-ஹொ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் விதுஷா மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது

வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த போராட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் வளாகத் தோ்வு

நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் இறுதி ஆண்டு பயின்று வெளியேறும் மாணவா்களுக்கான வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு விரிவ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

சுதந்திரப் போரட்ட வீரா் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளையொட்டி, அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். ... மேலும் பார்க்க

பவானியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பவானியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூா் மேட்டூ... மேலும் பார்க்க

முதியவரின் கழுத்தை அறுத்த வடமாநில இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து தப்பிச்செல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச் சந்தை வியாபாரிகள்

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாரச... மேலும் பார்க்க