செய்திகள் :

கடலூர், கள்ளக்குறிச்சி: ஏரி, ஓடையில் குளிக்கச் சென்ற 5 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி பலியான சோகம்

post image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கிறது வடக்கு கொளக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த உபையதுல்லா (9), முகமது ஹபில் (10), ஷேக் அப்துல் ரகுமான் (13) போன்றவர்கள் நண்பர்கள். இவர்கள் மூவரும் நேற்று மாலை வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது மேலும் இரண்டு சிறுவர்களும் அவர்களுடன் குளிப்பதற்காக சென்றனர். இரண்டு சிறுவர்களும் ஓடையின் கரைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், உபையதுல்லா, முகமது ஹபில், ஷேக் அப்துல் ரகுமான் போன்றவர்கள் ஓடைக்குள் சென்று குளித்தார்கள்.

உயிரிழந்த சிறுவர், சிறுமியர்

அப்போது திடீரென மூவரும் பள்ளமான பகுதிக்குச் சென்றதால் மூழ்க ஆரம்பித்தனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் தத்தளித்து உயிருக்குப் போராடினர். அப்போது கரையில் இருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர். அதைக் கேட்டு ஒடி வந்த அப்பகுதி மக்கள், ஓடையில் குதித்து சிறுவர்களை தேடினர். அவர்கள் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு சகதியில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களை சடலமாக  மீட்டனர். அவர்களைப் பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர்.

அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதிக்கு அருகில் இருக்கிறது பாசார் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி, சுவேதா என்ற சிறுமிகள் அதே பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 5 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களுடன் சேர்ந்து சுமார் 10 மாணவிகள் அந்த பகுதியிலுள்ள சித்தேரிக்கு குளிப்பதற்காக சென்றனர். அனைவரும் ஏரியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிவசக்தியும், சுவேதாவும் ஏரிக்குள் இருந்த தாமரை பூவை பறிப்பதற்காக ஏரியின் ஆழமான பகுதியை நோக்கிச் சென்றார்கள்.

உயிரிழப்பு

அப்போது திடீரென இருவரும் நீரில் தத்தளித்து மூழ்க ஆரம்பித்தனர். அதைப் பார்த்த மற்ற சிறுமிகள் ஓடிச் சென்று பெற்றோர்களை அழைத்து வந்தனர். அவர்கள் ஏரிக்குள் குதித்து சிவசக்தியையும், சுவேதாவையும் சடலங்களாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது இரண்டு சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த சம்பவங்களில் உயிரிழந்த 5 சிறுவர், சிறுமியருக்கும் நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இரண்டு மாவட்டங்களில் 5 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூரில் தொடர்ந்து சதமடித்த வெயில்... வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில... மேலும் பார்க்க

உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரி... மேலும் பார்க்க

பைக்கிற்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன்; பின் சீட்டிலிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவ... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல்லெறிந்த இளைஞர்கள்; காட்டில் அத்துமீறியதால் பரிதாபமாக பறிபோன உயிர் - என்ன நடந்தது?

ரம்ஜான் விடுமுறையைக் கொண்டாடும் விதமாக கேரளா மாநிலம் கோழிகோடு பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஊசி... மேலும் பார்க்க

Malaysia Fire Accident : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து | Shocking Video

​மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத... மேலும் பார்க்க

ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?

இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும். விபத்திற்கு காரணம் என்ன?... மேலும் பார்க்க