செய்திகள் :

தந்தை மறைவு: தாயகம் திரும்பினார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்!

post image

தந்தை மறைவால் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தாயகம் திரும்பினார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நாளை(பிப்.19) தொடங்குகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வருகிற வியாழக்கிழமை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிக்க..2024 - கௌதம் கம்பீர் வருகை! இந்திய அணிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கலின் தந்தை உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார். இதனால், மோர்னே மோர்க்கல் உடனடியாக தாயகம் திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் தொடர் முழுவதும் விலகியுள்ள நிலையில், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க.. 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!

அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்... மேலும் பார்க்க

அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள்... மேலும் பார்க்க

முகமது ஷமி 5 விக்கெட்டுகள்; இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விள... மேலும் பார்க்க

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்தியா- வங்கதேசம் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முத... மேலும் பார்க்க

காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!

முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் பேட்டர் ஃபகார் ஸமான் காயத்துடன் விளையாடியதை விமர்சித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந... மேலும் பார்க்க