செய்திகள் :

தனியார் நிறுவனங்களில் இனி 10 மணி நேரம் வேலை! - மகாராஷ்டிர அரசு திட்டம்

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு பணியாளர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு பரிசீலனை செய்து வருகிறது.

ஒரு வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்ற நடைமுறைதான் தற்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2017-ல் திருத்தம் மேற்கொள்ள அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அங்குள்ள கடைகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு தற்போதுள்ள 9 மணி வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரத்திற்கு மேலாக கண்டிப்பாக வேலை வாங்கக்கூடாது எனவும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக 12 மணி நேர வேலை என்பது நீக்கப்படுகிறது.

அதேபோல வேலை நேரம் தவிர கூடுதல் வேலை நேரத்தின் அளவு 3 மாதங்களுக்கு 125 மணி நேரத்தில் இருந்து 144 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூடுதலாக 10.30 மணி நேரம் வேலை செய்துகொள்ளலாம்.

இந்த மாற்றங்கள் குறித்து மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக தெலங்கானாவில் ஒரு நாள் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. கர்நாடகத்திலும் 10 - 12 மணி வேலை நேரமாக மாற்ற மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

வேலை நேரம் அதிகரிக்கப்படுவது தொழிலாளர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra may soon hike working hours to 10 in private establishments

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா். நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

2006-ல் விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய்யின் கட்சி பற்றி ஊடகத்திலோ ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரியில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.* நேற்று (27-08-2025) ஒரிசா கடலோரப் பகுதிகளில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் முதல் நான்கு வழக்குகளில் இருந்து 118 பேரை விடுதலை செய்து திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது மொத்தம் 12 ப... மேலும் பார்க்க

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஒரு சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பற்றி இன்... மேலும் பார்க்க