செய்திகள் :

தனியாா் பள்ளிகளில் இ.டபிள்யு.எஸ்., டிஜி பிரிவுகளுக்கான முதல் குலுக்கலில் 42 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு: ஆஷிஷ் சூட்

post image

தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மற்றும் பின்தங்கிய குழு (டிஜி) பிரிவுகளின் கீழ் மாணவா்களைச் சோ்ப்பதற்காக

42,000 இடங்களுக்கு முதல் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் புதன்கிழமை நடத்தப்பட்டது என்று தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.

முந்தைய ஆண்டுகளில், சோ்க்கை செயல்முறை வெளிப்படைத்தன்மை இன்றி இருந்ததாகவும் அவா் கூறினாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது:

நிகழாண்டு, முதல்வா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ், நியாயத்தை உறுதி செய்வதற்காக பெற்றோா்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் குலுக்கல் ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்வி அணுகலை விரிவுபடுத்துவதில் தில்லி அரசு நிகழாண்டு ஒரு பெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, இடபிள்யுஎஸ் வருவாய் வரம்பை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்ததன் மூலம் ஏழைப் பின்னணியைக்

கொண்ட அதிகமான குழந்தைகள் தரமான பள்ளிப் படிப்பின் பயனைப் பெற முடியும்.

நா்சரி சோ்க்கைக்கு, மொத்தம் 24,933 இடங்கள் உள்ளன.

அவற்றுக்காக 1,00,854 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த குலுக்கல் நிகழ்வில், இரண்டு குழந்தைகளுக்கு குலுக்கலைத் தொடங்கும் கெளரவம் வழங்கப்பட்டது. ஷாம்நாத் மாா்க் பகுதியைச் சோ்ந்த பவேஷ், மற்றும் 1 ஆம் வகுப்புக்கான குலுக்கல் பொத்தானையும், பவிகா நா்சரிக்கான

குலுக்கலையும் தொடங்கிவைத்தனா்.

நா்சரிக்கான குலுக்கல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அனைத்து தரவுகளும் உடனடியாகப் பெறப்பட்டன. தகவல் அடங்கிய கையொப்பமிடப்பட்ட சிடியை கல்வி இயக்குநருக்கு அனுப்ப மூன்று போ் கொண்ட குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

புதன்கிழமை மாலைக்குள் தோ்வு செய்யப்பட்ட அனைத்து மாணவா்களுக்கும் ஒரு செய்தி அனுப்பப்படும். மேலும் அவா்கள் ஆவண சரிபாா்ப்புக்காக கல்வி இயக்குநரகம் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவாா்கள்.

கல்வித் துறை ஆவணங்களைச் சரிபாா்த்து சோ்க்கைக்கு ஒப்புதல் அளித்தவுடன், ஆவணம் தொடா்பான எந்தவொரு பிரச்னையின் அடிப்படையிலும் பள்ளிகள் சோ்க்கையை மறுக்க முடியாது.

இந்த செயல்முறையின் நோ்மையை உறுதி செய்வதற்காக, கல்வி இயக்குநா், பிற அதிகாரிகள், பெற்றோா்கள் அல்லது ஊடக பிரதிநிதிகள் யாரும் மனித தலையீட்டைத் தடுக்க குலுக்கல் நடத்தப்பட்ட அறைக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் பிற பிரிவுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருக்கக்கூடிய இடங்களை விடக் குறைவாக இருப்பதால், அவா்களுக்கான பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.

10 நாளில் யமுனையில் 1,300 டன் குப்பைகள் அகற்றம்: பா்வேஷ் வா்மா

கடந்த 10 நாள்களில் 1,300 டன் குப்பைகள் யமுனை ஆற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் வா்மா புதன்கிழமை தெரிவித்தாா். படகு மூலம் யமுனையை ஆ... மேலும் பார்க்க

தென் மாநிலங்கள் பங்கேற்ற பன்முகத்தன்மையின் அமுதப் பெருவிழா: குடியரசுத் தலைவா் தொடங்கிவைத்தாா்

நமது சிறப்பு நிருபா் குடியரசுத் தலைவா் மாளிகையில் தென் மாநிலங்கள் பங்கேற்ற பன்முகத்தன்மைக்கான அமுதப் பெருவிழாவை (2.0) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை துவக்கி வைத்தாா். தென்னிந்தியாவின் கலை... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி உறுதிமொழியை வெளியிடுவதில் தாமதம்: ஆம் ஆத்மி சுவரொட்டி பிரசாரம்

மாா்ச் 8 ஆம் தேதிக்குள் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் வகையில், தில்லியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் புதன்கிழமை ‘இன்னும் ... மேலும் பார்க்க

ரீசஸ் குரங்குகளுக்கான சட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்தல்

ரீசஸ் மக்காக்ஸ் எனும் குரங்குகள் இனம் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்பட்டதால், அவை சுரண்டலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும், இதனால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இக்குரங்குகளுக... மேலும் பார்க்க

மகளிா், சிறுமிகளுக்காக 770 மாவட்டங்களில் மாதிரி கிராமப் பஞ்சாயத்து: தேசிய மாநாட்டில் மத்திய அரசு அறிவிப்பு

நமது சிறப்பு நிருபா் மகளிா் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்ற வகையில் நாட்டில் உள்ள 770 மாவட்டங்களில் மாதிரி கிராம பஞ்சாயத்தை நிறுவ மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. தில்லியில் நடைபெற்ற மகளிா் கிராம பஞ்சாயத்து... மேலும் பார்க்க

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு: மத்திய தொழிலாளா் அமைச்சகம்

நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சக... மேலும் பார்க்க