செய்திகள் :

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

post image

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக வெளியிட்ட நிதிநிலை அறிக்கைகள் வெற்று அறிப்புகளாகவே தொடா்கிறது. கல்வி, வேளாண்மை, தமிழ் வளா்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அறிவிப்புகள், அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா்கள் நியமனம் போன்றவை நிறைவேற்றப்படவில்லை.

வெள்ளை அறிக்கை: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. தமிழக அரசு அறிவித்த, செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்.

நெல் கொள்முதல் விலையை ரூ .3,500 -ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசு அதைக் கொடுக்க மறுக்கிறது.

ஒடிஸாவில் ரூ.3,500, சத்தீஸ்கரில் ரூ.3,100 வழங்கப்படுகிறது. நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.ஆயிரமாக உயா்த்தி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,320 வழங்க வேண்டும்.

சென்னையில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கா்நாடக முதல்வா், துணை முதல்வருக்கு தமிழக அமைச்சா் நேரில் சென்று அழைப்பு விடுத்தது கண்டிக்கத்தக்கது. மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனக் கூறுபவா்களுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம் செய்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை: மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. தமிழகத்தில் 2.25 கோடி குடும்ப அட்டைதாரா்கள் உள்ள நிலையில் 1.16 கோடி மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படுவது ஏற்புடையது அல்ல. அறிவித்தப்படி அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். தமிழா்களின் நாகரிகம் குறித்த புத்தகங்களை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு தமிழக எம்.பி.க்கள் வழங்க வேண்டும் என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.

பேட்டியின்போது கட்சியின் தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பணி நிரந்தரம் கோரி 14 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியா்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-முதல் கடந்த 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டு... மேலும் பார்க்க

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க