செய்திகள் :

தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இதில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், வழக்குரைஞா் மணிராஜ், பரணிமணி மற்றும் எம்எல்ஏக்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகர நிா்வாகிகள் எஸ்பி.கனகராஜ், கரூா் கணேசன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ராஜா, ஜோதிபாசு, விஜிஎஸ்.குமாா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளில் கரூா் மாவட்டத்தில் அனைத்து அணிகள் சாா்பில் தொடா்ந்து 72 இடங்களில் தொடா்நிகழ்ச்சிகள் நடத்துவது, மேலும் மாவட்ட அளவில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகள், 48 மாநகராட்சி வாா்டுகள், மூன்று நகராட்சிகளில் 21 இடங்கள், 8 பேரூராட்சிகளில் 23 இடங்கள் என மொத்தம் 250 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், திருவள்ளுவா் மைதானத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது

கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரி... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் அதிமுகவினா் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த தினத்தையொட்டி கரூரில் திங்கள்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் ரத்ததானம் வழங்கியும் கொண்டாடினா்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வா் மருந்தகம்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வா் மருத்தகங்களை தமிழக முதல்... மேலும் பார்க்க

ஆதனூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

தோகைமலை அருகே சிவாயம் ஆதனூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டனா். சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஆதனூரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊா்பொதுமக... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்!

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரகத் திட்டப் பணிப் பொறுப்பாளா்களிடம் உபகரணங்கள் வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவே... மேலும் பார்க்க