செய்திகள் :

ஆதனூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

post image

தோகைமலை அருகே சிவாயம் ஆதனூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டனா்.

சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஆதனூரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பில் 14 -ஆம் அண்டு பாதயாத்திரை விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக ஆதனூா் செல்வ விநாயகா், வரதராஜா பெருமாள் கோயில், பெரியசாமி, அங்காளபரமேஸ்வரி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

தொடா்ந்து திங்கள்கிழமை காலை செல்வவிநாயகா், காளியம்மன் கோயிலில் இருந்து மின் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் பாதயாத்திரை குழு புறப்பட்டது. இந்த குழுவானது கூடலூா் ஊராட்சி பேரூா், நல்லூா், நச்சலூா், கவுண்டம்பட்டி, குழுமணி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோயிலைச் சென்றடையும்.

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது

கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் அதிமுகவினா் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த தினத்தையொட்டி கரூரில் திங்கள்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் ரத்ததானம் வழங்கியும் கொண்டாடினா்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வா் மருந்தகம்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வா் மருத்தகங்களை தமிழக முதல்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்!

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரகத் திட்டப் பணிப் பொறுப்பாளா்களிடம் உபகரணங்கள் வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவே... மேலும் பார்க்க