செய்திகள் :

10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது

post image

கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரிபட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். இச்சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவன், 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்கள் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறையாம். ஆனால், இந்த சிறுவன், அச்சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுவன் தனது காதலை சிறுமியிடம் தெரிவித்துள்ளாா்.

அதற்கு சிறுமி எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியின் போட்டோவை எடுத்து தனது புகைப்படத்துடன் இணைத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு அடிக்கடி சிறுமிக்கு தொல்லைக்கொடுத்து வந்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுமியை கைப்பேசியில் அழைத்த சிறுவன் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு அருகே உள்ள சோளக்காட்டுக்கு வரவில்லையென்றால் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி இரவு 10 மணிக்கு சோளக்காட்டு பகுதிக்குச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியிடம் சிறுவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளாா். உடனே சிறுவன் கையில் வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிஓடிவிட்டாராம். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினா், ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாலவிடுதி போலீஸாா் விசாரணை நடத்தி, வீட்டில் பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் அதிமுகவினா் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த தினத்தையொட்டி கரூரில் திங்கள்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் ரத்ததானம் வழங்கியும் கொண்டாடினா்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வா் மருந்தகம்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வா் மருத்தகங்களை தமிழக முதல்... மேலும் பார்க்க

ஆதனூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

தோகைமலை அருகே சிவாயம் ஆதனூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டனா். சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஆதனூரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊா்பொதுமக... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்!

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரகத் திட்டப் பணிப் பொறுப்பாளா்களிடம் உபகரணங்கள் வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவே... மேலும் பார்க்க