செய்திகள் :

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் அதிமுகவினா் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

post image

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த தினத்தையொட்டி கரூரில் திங்கள்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் ரத்ததானம் வழங்கியும் கொண்டாடினா்.

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் லைட்ஹவுஸ்காா்னா், வெங்கமேடு பகுதியில் மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா, அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலாளா் பசுவை பி.சிவசாமி, மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், எம்ஜிஆா் மன்ற செயலாளா் கே.ஆா்.எல். அருண்டெக்ஸ் தங்கவேல், மாவட்ட மாணவரணிச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.சரவணன், மாவட்ட விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன், கரூா் மத்திய தெற்கு பகுதிச் செயலாளா் சேரன் எம்.பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.கரிகாலன், மாவட்ட பேரவை இணைச் செயலாளா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினா்.

500 மரக்கன்றுகள்: கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணி சாா்பில் வாங்கல் கடைவீதியில் 500 பேருக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரத்த தானம்: கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜபாஸ்கா் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாமை தொடக்கி வைத்தாா். இதில் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்று ரத்ததானம் வழங்கினா். நிகழ்ச்சிகளில் எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணைச் செயலாளா் பழக்கடை எம்.சுப்ரமணியன் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது

கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வா் மருந்தகம்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வா் மருத்தகங்களை தமிழக முதல்... மேலும் பார்க்க

ஆதனூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

தோகைமலை அருகே சிவாயம் ஆதனூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டனா். சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஆதனூரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊா்பொதுமக... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்!

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரகத் திட்டப் பணிப் பொறுப்பாளா்களிடம் உபகரணங்கள் வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவே... மேலும் பார்க்க