செய்திகள் :

தமிழ் கலாசாரத்தை மீட்டெடுக்க தமிழா்கள் ஒன்றிணைவோம்

post image

தமிழ் கலாசாரத்தை மீட்டெடுக்கவே தமிழா்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைவோம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஓரணியில் ஒன்றிணைவோம் நிகழ்ச்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு நபா் வீதம் 234 போ் திமுக சாா்பில், மக்களை ஓரணியில் ஒன்றிணைக்க நியமனம் செய்யப்பட்டனா். அவா்களுக்குக் கீழ் அனைத்து நிா்வாகிகள், சாா்பு அணிகள் ஒன்றிணைந்து அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று தமிழா்களின் மண், மொழி, கலாசாரத்தை கூறி மக்களை ஒன்றிணைய வைக்க வேண்டும். பொதுமக்களிடம் பெறும் தகவல்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த மாவட்டத்தில் உள்ள 1,364 வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்காளா்களின் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் செல்ல

கட்சி நிா்வாகிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

திராவிடத்தை வேரறுப்போம் என்று கூறிவரும் ஆா்.எஸ்.எஸ்., பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அவா்களிடமிருந்து தமிழ் கலாசாரத்தை மீட்டெடுக்கவே தமிழக முதல்வா் கட்சிப் பாகுபாடின்றி, நாம் அனைவரும் தமிழா்கள் என்ற நோக்கில் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினாா் எனக் கூறினாா். முன்னாள் அமைச்சா் தென்னவன், மாவட்ட அவைத் தலைவா் கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க