செய்திகள் :

தமிழ்நாட்டில் அதிமுக, தவெக கொடி பறக்கக் கூடாதா?: முதல்வருக்கு ஜெயகுமார் கேள்வி

post image

அழகுமுத்துக் கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?, அதிமுக, தவெக கொடி பறக்கக் கூடாதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.

வைகோ நன்றி மறக்கக்கூடாது, அ‌திமுகவால் தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது என தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் அழகுமுத்துக் கோன், மார்பை பிளந்தபோதும் அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு முறையாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், லாக்கப் மரணங்கள் என அதிகரித்து வருகிறது. இன்றைக்கு இந்திய விடுதலைப் போராட்ட வீரரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு கூட சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என விமர்சித்தார்.

வைகோ நன்றி மறந்து பேசுவது நல்லது அல்ல, திமுகவில் இருந்து அவர் பிரிந்து வந்த போது அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்தான் அங்கீகாரம் கிடைத்தது என்பது அவர்களுக்கே தெரியும்.கொஞ்சம்கூட வாய் கூசாமல் மறைந்த தலைவரை இழிவுபடுத்தி பேசுவது வைகோவுக்கு நல்லதல்ல. மதிமுகவில் இருந்த தலைவர்கள் பலர் விலகி திமுகவில் இணைந்தபோது வைகோ என்னென்ன விமர்சனங்களை வைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.

மேலும், அழகுமுத்துக் கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டுள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?, அதிமுக, தவெக கொடி பறக்க கூடாதா? என ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.

1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஆா்பி அறிவிப்பு

Former ADMK minister Jayakumar questioned whether only the DMK flag should be flown in Tamil Nadu, and not the ADMK and TVK flags.

எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்படாயோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!

திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிர... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்

தமிழ்நாடு முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் பங்கேற்கும் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

மேட்டூா்: மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறதுமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,250 கனஅடி... மேலும் பார்க்க