செய்திகள் :

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டம்: முதல்வர் ஸ்டாலினின் நிலைபாடு என்ன? - அமைச்சர் விளக்கம்!

post image

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன எடுக்க கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதற்குமுன்பே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடந்தது.

இந்த நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இது மீண்டும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அதில், ``தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் (Protected Agricultural Zone – PAZ)" சட்டம், 2020ஐ இயற்றி அதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் ஹைட்ரோகார்பன், நிலக்கரி படிகேஸ், இயற்கை எரிவாயு, நிலத்தடி நீர் உப்பீடு, சுரங்கங்கள் மற்றும் பிற சுரங்க திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை என்றும், தமிழக அரசு இவ்விடயத்தில் தன் நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது.

இதற்கிடையில், M/s. Oil and Natural Gas Corporation Ltd., (ONGC) சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) M/s. Oil and Natural Gas Corporation Ltd., (ONGC)க்கு சுற்றுச்சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியச் செய்தி தமிழக அரசு கவனத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து, ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்பப் பெறுமாறு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

விவசாயம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டமான கொள்கை.

எனவே, தமிழகத்து மட்டுமின்றி எதிகாலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் இதுபோன்ற திட்டங்களை செய்ய தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்' - 5 முறை எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சு

விண்வெளிக்கு முதலில் யார் சென்றது என்பது குறித்து பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்... மேலும் பார்க்க

``பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிறது'' - அனுராக் தாக்கூர் குறித்து சு.வெங்கடேசன்

தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றி இருக்கிறார்.அப்போது, 'விண்வெளிக்குச் சென்ற முதல் நபர்... மேலும் பார்க்க

``ரஷ்யாவை வழிக்கு கொண்டுவர இந்தியாவுக்கு வரி'' - அமெரிக்க துணை அதிபர் சொல்வது என்ன?

இந்தியாவிற்கு 50 சதவிகித வரி விதித்தது குறித்து நேர்காணலில் பேசியுள்ளார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். ஜே.டி.வான்ஸ் பேசியது என்ன? நேர்காணலில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும்... மேலும் பார்க்க

சாலையை அடைத்துக் கூட்டம்... ஆம்புலன்ஸை மறித்து அதிகாரப் பேச்சு...

எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் ஆணவப் பேச்சு, உயிர் காக்கும் சேவையை இரவு, பகலாகச் செய்யும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பா... மேலும் பார்க்க