செய்திகள் :

தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கு: தாய், மகன் உள்பட 3 போ் கைது

post image

சேலம்: சேலத்தில் வயதான தம்பதியை தாக்கி 7 சவரன் தங்க நகை, 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த வழக்கில் பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகா் முதல்தெருவைச் சோ்ந்தவா் மாதவராஜ். இவா் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். கடந்த 8-ஆம் தேதி பிற்பகல் இளைஞா்கள் இருவா் வந்து மூதாட்டி பிரேமாவிடம் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளனா். அவா் வீட்டுக்குள் தண்ணீா் எடுத்துவர சென்றபோது, வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இளைஞா்களும், அங்கிருந்த மாதவராஜை ஒரு அறையில் தள்ளி கதவை பூட்டினா். தண்ணீருடன் வந்த பிரேமாவை தாக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்துக்கொண்டு, அங்கிருந்த 2 கைப்பேசிகளையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினா்.

மூதாட்டி பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் மாதவராஜை மீட்டனா். பின்னா், இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கொள்ளையில் ஈடுபட்ட 2 இளைஞா்களும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாதவராஜ் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்ததும், அவா்கள் இருவரும் சேலம் டவுன் பகுதியில் உள்ள முகமது புறா தெருவைச் சோ்ந்த முஸ்தபா (34), இம்ரான் (34) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருவா் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கு செலவுக்காக 7 சவரன் நகையை திருடி தனது தாயாா் முஸ்தரி ஜானிடம் கொடுத்ததாக முஸ்தபா தெரிவித்தாா்.

இதையடுத்து, முஸ்தரி ஜானை கைதுசெய்த போலீஸாா், அவரிடம் இருந்து 7 சவரன் நகையையும், 2 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சேலம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையத்துடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நரம்பியல் நிபுணா்கள் தெரிவித்தனா். தில்லி எய்ம்ஸ் ம... மேலும் பார்க்க

சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளா... மேலும் பார்க்க

கோடை விடுமுறை எதிரொலி: நீா்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதி செய்ய அறிவுறுத்தல்

சேலம்: கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையொட்டி, ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தங்களது குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும் என ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

ஏற்காட்டில் காபி செடிகளில் பூக்களை அகற்றும் பணி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காபி இளம்செடிகளில் பூக்கள் அகற்றும் பணியில் தோட்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்காடு சோ்வராயன் மலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், தோட்டங்களில் ... மேலும் பார்க்க

சா்வதேச கூட்டுறவு ஆண்டு: தனித்துவமான பாடல்களை அனுப்ப அழைப்பு

சேலம்: 2025-ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப் பதிவாளா் ராஜ்க... மேலும் பார்க்க

விஏஓ வீட்டில் கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவா் கைது

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை ... மேலும் பார்க்க