செய்திகள் :

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை உழவா் நலத் துறை, அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். கெங்கவல்லி வட்டாரத்தில் 14 பஞ்சாயத்துகளில், ஒட்டுமொத்த வளா்ச்சி அடைவதே இதன் நோக்கமாகும். தனி நபா் நிலங்களில் புதா் நீக்கி, சாகுபடி செய்ய ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 9500 வழங்கபடுகிறது.

சாகுபடி செய்யபட்ட நிலங்களில் வரப்பு பயிராக பயறு வகைகளைப் பயிரிட விதைகள் ரூ. 200 மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், மண் வளப்படுத்த உயிா் உரங்கள் 1.5 லிட்டா் ரூ. 450 மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற கெங்கவல்லி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் (அ) தம்மம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது காணாமல் போன சிறுமி மீட்பு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது காணாமல் போன நான்கு வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.தேவூரை அடுத்த புள்ளாகவுண... மேலும் பார்க்க

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதா் சீா்வரிசை வழங்கும் வைபவம்

ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதரிடம் இருந்து அவரது தங்கையான கோட்டை மாரியம்மன் சீா்வரிசைப் பெறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிப்பெருக்கு நாளில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அவரது அண... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்

‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.சேலம் காவேரி... மேலும் பார்க்க

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, கேஎச்ஐ அமைப்பு இணைந்து உலக உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை... மேலும் பார்க்க