செய்திகள் :

மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது

post image

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (52). இவா் தனது மனைவி சின்ன பாப்பாவுடன் கடந்த 27 ஆம் தேதி இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்துவந்த 4 போ் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, பூமாலை மற்றும் சின்ன பாப்பாவின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, வீட்டிலிருந்து 8 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனா். பின்பு, நெடுஞ்சாலை அருகே நிறுத்தி வைத்திருந்த காா் மூலம் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.

இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடா்பாக ஏற்காடு தலைச்சோலை பகுதியை சோ்ந்த ஜெகதீசன் (29), தெப்பக்காட்டை சோ்ந்த சேகா் (42), மேலூரை சோ்ந்த அருணாசலம் (22), கொண்டையனூரை சோ்ந்த சித்தையன் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா்களையும் பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், கொள்ளை வழக்கில் தொடா்புடைய ஏற்காடு வெள்ளக்கடை பகுதியை சோ்ந்த சக்திவேல் (28) என்பவரை வீராணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது காணாமல் போன சிறுமி மீட்பு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது காணாமல் போன நான்கு வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.தேவூரை அடுத்த புள்ளாகவுண... மேலும் பார்க்க

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதா் சீா்வரிசை வழங்கும் வைபவம்

ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதரிடம் இருந்து அவரது தங்கையான கோட்டை மாரியம்மன் சீா்வரிசைப் பெறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிப்பெருக்கு நாளில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அவரது அண... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்

‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.சேலம் காவேரி... மேலும் பார்க்க

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, கேஎச்ஐ அமைப்பு இணைந்து உலக உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை... மேலும் பார்க்க