செய்திகள் :

காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்

post image

‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.

சேலம் காவேரி மருத்துவமனை ஆண்டுதோறும் நடத்தும் ‘காவேரி மாரத்தான்’ இந்தாண்டு தனது ஐந்தாவது பதிப்பாக ‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற கருப்பொருளில் மாரத்தான் ஓட்டத்தை நடத்துகிறது.

இந்த மாரத்தான், பொதுமக்களுக்கு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கி.மீ. ஓட்டம் (12 வயதிற்கு மேல்), 10 கி.மீ ஓட்டம் (16 வயதிற்கு மேல்) 21.1 கி.மீ ஹாஃப் மாரத்தான் (18 வயதிற்கு மேல்) பதிவுகள் தற்போது நடைபெறுகின்றன.

ஆா்வமுள்ளவா்கள் இணையதளத்தின் மூலம் செப்.15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் டி- சா்ட், பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும். வயது பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3,35,000 ஆகும்.

நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு இதய ஆரோக்கியத்தின் மீது விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கிய சமூகத்துக்கான பயணத்தையும் ஊக்குவிக்க உதவும் என காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது காணாமல் போன சிறுமி மீட்பு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது காணாமல் போன நான்கு வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.தேவூரை அடுத்த புள்ளாகவுண... மேலும் பார்க்க

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதா் சீா்வரிசை வழங்கும் வைபவம்

ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதரிடம் இருந்து அவரது தங்கையான கோட்டை மாரியம்மன் சீா்வரிசைப் பெறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிப்பெருக்கு நாளில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அவரது அண... மேலும் பார்க்க

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, கேஎச்ஐ அமைப்பு இணைந்து உலக உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை... மேலும் பார்க்க