செய்திகள் :

திண்டுக்கல் கன்னிவாடி: `அத்துமீறி வனப்பகுதிக்குள் சென்ற 29 பேருக்கு அபராதம்' - வனத்துறை நடவடிக்கை

post image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கன்னிவாடியில் மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் மலைப்பகுதியான கன்னிவாடி மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் காட்டு மாடுகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

கன்னிவாடி காப்புகாடு

இந்த காட்டு விலங்குகள் அடிக்கடி மலை அடிவார பகுதிக்கு வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதும், பொதுமக்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே கன்னிவாடி மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மலையாக அப்பகுதி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கன்னிவாடி பிளாக் 1 காப்புக்காடு பகுதிகளில் வனசரகர் குமரேசன், வன பாதுகாவலர் திலகராஜா மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சிலர் மலையேற்ற பயிற்சி ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட வனத்துறையினர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையினரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கன்னிவாடி வனசரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கன்னிவாடி காப்புகாடு

விசாரணையில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்கள் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 நபர்கள் கன்னிவாடி மலை பகுதிக்கு வந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 29 நபர்களுக்கும் தல 4,500 ரூபாய் என மொத்தம் 1,30,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மும்பையில் மீண்டும் கனமழை; மலையிலிருந்து சரிந்து விழுந்த வீடுகள்; அரசின் எச்சரிக்கைகள் என்னென்ன?

மும்பையில் கடந்த சில நாள்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று காலையிலிருந்தே மும்பையின் பல்வேறு பகுதியில் மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.தென்மும்பையில் உள்ள லால்பாக், பைகுலா, சி.எஸ்.டி.எம்., ச... மேலும் பார்க்க

டெக்ஸாஸ் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம் - 'ட்ரம்ப், மஸ்க்' குற்றம்சாட்டப்படுவது ஏன்?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 180க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் நியூ ய... மேலும் பார்க்க

Rocky: நிலச்சரிவிலிருந்து 67 பேர் உயிரைக் காத்த நாய்குட்டி - இமாச்சலில் மனதை உருக்கும் சம்பவம்!

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை தொடங்கியது முதல் பல்வேறு மேகவெடிப்பு நிகழ்வுகளால் மழைக் கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பகுதியாக கடந்த ஜூன் 26ம் தேதி மண்டி ... மேலும் பார்க்க

Himachal Rains: 69 பேர் மரணம்; ரூ.700 கோடி இழப்பு... இமாச்சலை புரட்டிப்போட்ட பருவமழை!

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அதீத மழைப்பொழிவு மற்றும் மேகவெடிப்பால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 69 பேர் பலியாகியுள்ள நிலையில் 700 கோடிக்கும் அதிகமான மதிப்புடை... மேலும் பார்க்க