செய்திகள் :

``இந்தி மாநிலங்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" - எம்.பி மனோஜ் குமார் ஜா

post image

டெல்லியின் இந்திய சர்வதேச மையத்தில் ஆய்வாளர் கசாலா வஹாப்பின் "தி ஹிந்தி ஹார்ட்லேண்ட்" வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.ஜே.டி கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ``இந்தியாவின் 38 சதவிகித நிலப்பரப்பை உள்ளடக்கிய வடக்கில் உள்ள ஏழு மாநிலங்களில், அரசியல் காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திய வகுப்புவாத பதற்றம், பொருளாதார பின்தங்கிய நிலை, பன்முகத்தன்மையில்லா சூழல் ஆகியவை சிக்கலாக மாறியிருக்கின்றன.

இந்தியா என்ற கருத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், 'இந்தி ஹார்ட்லேண்ட்' சில நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவைப் குறித்தப் பொதுவான கருத்து இந்தி ஹார்ட்லேண்ட்-லிருந்தே வருகிறது.

Hindi Heartland event
Hindi Heartland event

இரண்டு மதங்களுக்கு மத்தியில் இருக்கும் சகிப்புத்தன்மை என்பது நல்லொழுக்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாகும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. சந்தர்ப்பவாத வரலாற்றின் யுகத்தில், சகிப்புத் தன்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் மொழிப் போர்கள் நடத்தப்படுகின்றன. இந்தி திணிப்பு என்பது செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் கூட ஒரு நீடித்த பயமாகவே இருக்கிறது.

இருப்பினும், இந்தி நகைச்சுவையுடனும், பிரபல கலாசாரத்துடனும் நெருங்கிய தொடர்புடையது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிலிருந்து ஏராளமான மொழிபெயர்ப்புகள் வருகிறது. குறிப்பாக இந்தி, தமிழ் மொழிகளிலிருந்து வருகிறது. இதற்கு அரசு இந்த மொழிகளை விரும்புகிறது என்பது பொருளல்ல. இந்த மொழிகளை மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் செய்தி” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்" - கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

Modi TN Visit: "திமுக, பாஜக-வின் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தவெக விஜய்

தி.மு.க.. பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்அவர் வெயிட்டிருக்கும் அறிக்கையில், "கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற,... மேலும் பார்க்க

Operation Sindoor: `தாக்குதலுக்கு யார் பொறுப்பு? யாரிடம் சரணடைந்தீர்கள்?’ - காங்கிரஸ் காட்டம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க

"ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" - கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாச... மேலும் பார்க்க

Rajendra Balaji: “என்னைக் குறி வைக்கின்றனர்” - கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி; என்ன நடந்தது?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்ன... மேலும் பார்க்க

Op Sindoor : `பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மிடம் பேசினார்கள்’ - ராஜ்நாத் சிங் முழு உரை

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க