செய்திகள் :

கடைசி டெஸ்ட்: ரிஷப் பந்த் விலகல்; தமிழக விக்கெட் கீப்பர் அணியில் சேர்ப்பு!

post image

எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது பந்து பலமாக காலில் பட்டதால், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

ரிஷப் பந்த் விலகல்; தமிழ வீரர் சேர்ப்பு

கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 முதல் தொடங்கவுள்ள நிலையில், எலும்பு முறிவு காரணமாக ரிஷப் பந்த் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ரிஷப் பந்த்துக்குப் பதிலாக கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் என்.ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், அர்ஷ்தீப் சிங், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).

இங்கிலாந்தில் ஜடேஜாவின் தனித்துவமான சாதனை!

இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து க... மேலும் பார்க்க

முதல் முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் புதிய சாதனை!

இந்திய அணியின் பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய... மேலும் பார்க்க

இந்திய அணியின் முடிவு சரியே; ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்கள்!

போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ளக் கூறிய இங்கிலாந்தின் முடிவை ஏற்காமல் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது சரியே என முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளு... மேலும் பார்க்க

5-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுகிறாரா? ஷுப்மன் கில் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்... மேலும் பார்க்க

முதல் சதமடித்த வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜாவும் சதமடித்து அசத்தல்! 4-ஆவது டெஸ்ட் டிரா!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆல் ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் முதல் சதமடித்தார். ஜடேஜாவும் சதமடித்து அசத்தினார்.206 பந்துகளைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை பதிவு செய்தா... மேலும் பார்க்க