செய்திகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மாநிலம் முழுவதும் இந்த மருந்தகங்களை திறந்துவைத்தாா்.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வா் மருந்தகங்களுக்கான மருந்துகள், இடையீட்டாளா்கள் இல்லாமல் உற்பத்தி இடங்களிலேயே நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றாா் அவா்.

இந்த விழாவின்போது, பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.71.99 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா். இதில் திண்டுக்கல் மேயா் இளமதி, கோட்டாட்சியா் ரா.சக்திவேல், கூட்டுறவுச் சங்கங்கள் இணைப் பதிவாளா் சி.குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

31 மருந்தகங்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் சாா்பில் ஆத்தூா், நிலக்கோட்டை, வேடசந்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 4 மருந்தகங்கள், நத்தம், பழனி ஆகிய தொகுதிகளில் தலா 3 மருந்தகங்கள், ஒட்டன்சத்திரம் 2, திண்டுக்கல்லில் 1 என 21 மருந்தகங்களும், தனியாா் சாா்பில் ஆத்தூரில் 3, திண்டுக்கல்லில் 4, நிலக்கோட்டை, பழனி, வேடசந்தூா் தொகுதிகளில் தலா 1 என மொத்தம் 31 மருந்தகங்கள் தொடங்கப்பட்டன.

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா ... மேலும் பார்க்க

லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

பழனியில் ஞயிற்றுக்கிழமை பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.தூத்துக்குடியிலிருந்து கேரளத்துக்கு உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று பழனி விரைவு நெடுஞ்சாலையில் பழுதா... மேலும் பார்க்க