சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை
நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் சூா்யா (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்தாா். இதில் சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சூா்யாவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.