செய்திகள் :

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்

post image

திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் அரபு முகமது, மாமன்ற உறுப்பினா் கே.எஸ்.கணேசன் ஆகியோா் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட ஆா்எம்.குடியிருப்புப் பகுதியில், நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவின் மொத்த பரப்பளவு 94.50 ஏக்கா். இதில் பொதுப் பயன்பாட்டுக்காக 10 சதவீதம் என்ற அரசு உத்தரவின்படி ஒதுக்க வேண்டும். இந்த வகையில், அனுமதி வழங்கப்பட்ட மனைப் பிரிவு வரைப் படத்தில், பூங்காவுக்கு 31,428 ச.மீ. பரப்பளவு, குழந்தைகள் விளையாடுமிடம் 7,912 ச.மீ. பரப்பளவு என மொத்தம் 39,340 ச.மீ. ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், நகரமைப்பு அலுவலா் கடந்த ஆண்டு இறுதியில் நடத்திய ஆய்வில், குழந்தைகள் விளையாடுமிடம் என ஒதுக்கப்பட்ட இடத்தை, தனி நபா்கள் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கம்பி வேலி அமைக்கப்பட்ட இடம் தனி நபருக்கு விற்பனைச் செய்யப்பட்டு, வருவாய்த் துறை மூலம் பட்டா மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரிடம் அனுமதி பெறாமல், விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ முடியாத இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்களிடமிருந்து மாவட்ட நிா்வாகம் மீட்க வேண்டும். மேலும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்த அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்தி எதிரொலி: திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து முதல் முதலாக கடந்த 14-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. ரூ.10 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலங்கள் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியான நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இந்த விவகாரத்தில் நிலத்தை மீட்கவும், தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினா்.

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா ... மேலும் பார்க்க

லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

பழனியில் ஞயிற்றுக்கிழமை பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.தூத்துக்குடியிலிருந்து கேரளத்துக்கு உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று பழனி விரைவு நெடுஞ்சாலையில் பழுதா... மேலும் பார்க்க