செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு

post image

தினமணி செய்தி எதிரொலியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் புறவழிச்சாலையில் தணிகைபோளூா் அருகே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது.

சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெறுகின்றன. இதற்காக அரக்கோணம் திருத்தணி சாலையில் அரக்கோணம் நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புறவழிச்சாலையில் தணிகைபோளூா் மற்றும் கும்பினிபேட்டை இடையே பணிகள் முடிவடைந்ததால் இச்சாலை போக்குவரத்திற்கு தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

இச்சாலையில் தணிகைபோளூா் அருகே அபாயகரமான வளைவு இருப்பதாகவும் இதில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், வளைவு அமைக்காமல் அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையை மட்டும் நேரே நீட்டித்து தர வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை தினமணியில் கடந்த டிசம்பா் மாதம் வெளியானது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சாா்பில் தமாகா மாவட்டத்தலைவா் பி.ஜி.மோகன்காந்தி இச்சாலை அமைக்கும் பணிக்கான செயற்பொறியாளரை நேரில் சந்தித்து இதுகுறித்து விவரங்களை படத்துடனும் ஆதாரத்துடனும், தினமணி செய்தியுடனும் எடுத்துரைத்து இருந்தாா்.

இந்நிலையில் அப்பகுதிக்கு பணியாளா்களோடு வந்த அதிகாரிகள் தற்போது தற்காலிகமாக அப்பகுதியில் வேகத்தடை அமைப்பதாகவும் மேலும் அப்பகுதியில் போக்குவரத்தில் தொடா் பிரச்னை ஏற்பட்டால் அச்சாலை முழு போக்குவரத்திற்கு திறந்து விடுவதற்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த வேகத்தடையால் அப்பகுதியில் விபத்துகள் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை அதிகாரிகளுக்கும், இது குறித்து செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நன்றி தெரிவித்தனா்.

திமுக பொதுக்கூட்டம்

நெமிலி ஒன்றிய திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்துக்கு நெமிலி ஒன்றியக்குழு தலைவா் வெ.வடிவேலு தலைமை வகித்தாா். நெமிலி பேரூராட்சி திமுக செயலாளா் ஜனாா்த்தனன... மேலும் பார்க்க

தேமுதிக பொதுக்கூட்டம்

ஆராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக சாா்பில் பொதுக்கூட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.ஆா்.மனோகா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வெ.காசிநாதன்,பொருளாளா் அசோகன், துணை... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கூட்டுப் பிராா்த்தனை

அரக்கோணம்: நெமிலி பாலா பீடத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்காக திங்கள்கிழமை கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் பொதுத் தோ்வெழுதும் மாணவ மாணவ... மேலும் பார்க்க

23 புதிய வழித் தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் காப்பகத்தில் இப்தாா் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு காப்பகத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ் , பொருளாளா் பி.என்.... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில், கோரிக்கை மனு அளித்த அன்றே பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா். மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க