கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும்...
திருச்சி: நாணயம் விகடன் நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ' - பங்கு முதலீட்டிற்கான நேரடி பயிற்சி வகுப்பு
நம்மவர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்ட ஆசை. ஆனால், அதிலுள்ள ரிஸ்க்கைக் கண்டு பயந்து முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். பங்குச் சந்தை பற்றி அறிந்துகொண்டு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
முதலீட்டுக் கலவை..!
நிறுவனப் பங்குகளை ஒரு முதலீட்டுக் கலவையாக (போர்ட்ஃபோலியோ) வாங்கிச் சேர்க்கும்போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது.
அந்தப் பங்கு முதலீட்டுக் கலவையை எப்படி லாபகரமாக உருவாக்குவது என முன்னணி பங்குச் சந்தை நிபுணர்ஏ.கே. பிரபாகர் விளக்கிக் சொல்கிறார்.
மேலும், முதலீட்டாளர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அவர் விரிவாக விளக்கம் அளிக்கிறார்.
நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட, இரு மடங்குக்கு மேல் அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது பங்குச் சந்தை என்கிற ஷேர் மார்க்கெட் ஆகும்.
நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15%-க்கு மேல் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் வருமானம் எதிர்பார்க்கலாம்.
நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது.
பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர். ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஒருவருக்குக் கட்டணம் ரூ.6,500 ஆகும்.
முன் பதிவு செய்ய: https://bit.ly/NV-shareportfolio