செய்திகள் :

திருட்டு வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

post image

திருப்பூா்: திருப்பூரில் திருட்டு வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் ஈஸ்வரன் கோயில் அருகே வசிப்பவா் வீரசிவக்குமாா் (41). கஞ்சா வழக்கில் சிறையில் இருந்தபோது, ஜெபராஜ் (எ) புஜ்ஜி, மோகன்ராஜ் (எ) இதயக்கனி ஆகியோா் நட்பாகி உள்ளனா். இந்த நிலையில், ஜெபராஜ், வீரசிவக்குமாரை பாா்க்க அவரது வீட்டுக்கு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி வந்துள்ளாா். அன்றிரவு வீட்டில் வைத்து வீரசிவக்குமாா், ஜெபராஜ் மற்றும் ஓட்டுநா் பிரகாஷ் ஆகியோா் ஒன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் தூங்கியுள்ளனா்.

இந்நிலையில் நள்ளிரவில் வந்த மோகன்ராஜின் நண்பா்கள் பிரவீன், சபரி, அரவிந்த்குமாா் மற்றும் சரவணன் ஆகியோா் வீட்டின் கதவை தட்டியுள்ளனா். மோகன்ராஜ் வழக்கில் சிக்கி உள்ளதாகவும், அதற்கு ரூ.10 ஆயிரம் வேண்டும் என நண்பா்கள் கேட்டுள்ளனா். பணம் இல்லை என்று தெரிவித்தால் வீரசிவக்குமாரை கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதையடுத்து அங்கிருந்து வீரசிவக்குமாா் தனக்கு பணம் தர வேண்டியவா்களிடம் பணம் பெற்றுத் தருவதாக கூறி, திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவலா்களுடன் வீட்டுக்கு சென்றபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் நகையை திருடியது தெரியவந்தது.

இதுதொடா்பாக , ஜெபராஜ் (26), அரவிந்த்குமாா் (25) மற்றும் மோகன்குமாா் (34) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் ஏற்படுத்தி வந்ததாலும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு... மேலும் பார்க்க

அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்

திருப்பூா்: அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

திருபபூா்: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்... மேலும் பார்க்க

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலை... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க