செய்திகள் :

திருத்தணி: மலைக்கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அதிரடியாக அகற்றினா்.

திருத்தணி முருகன் கோயிலில் வரும், 31-ஆம் தேதி திருப்படித் திருவிழாவும், ஜன.1 -ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. விழாவில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்வா்.

மேலும், ஆண்டுக்கு 365 நாள்களைக் குறிக்கும் வகையில், முருகன் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளதால், 31-ஆம் தேதி காலை, 6 மணி முதல் நள்ளிரவு, 12 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிப்படுவா். இதுதவிர, 100-க்கணக்கான பஜனை குழுவினரும் படிகள் தோறும் முருகப் பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோயிலுக்கு சென்று வழிபடுவா்.

இந்நிலையில் மலைப்படிகள் ஒரம் கடைகள் வைத்து ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதையொட்டி சனிக்கிழமை திருத்தணி கோயில் இணை ஆணையா் க. ரமணி தலைமையில், உதவி ஆணையா் விஜயகுமாா், திருத்தணி வருவாய் ஆய்வாளா் கணேஷ் குமாா் மற்றும் வருவாய், கோயில் ஊழியா்கள் கோயிலுக்கு செல்லும் சன்னதி தெரு, மலைப்படிகள் மற்றும் மலைக்கோயில் தோ்வீதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினா்.

14 கிலோ கஞ்சா பறிமுதல். 2 போ் கைது

திருத்தணி: பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக சென்னை சென்ற அரசு பேருந்தில் 14 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள... மேலும் பார்க்க

ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் நள்ளிரவில் காவல் ஆணையர் தீவிர ரோந்துப் பணி

ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் மருத்துவமனைகள், பள்ளிகள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் ஆணையர் கி.சங்கர் சனிக்கிழமை நள்ளிரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.ஆவடி காவல் மாவட்டத்தில் உள்ள ... மேலும் பார்க்க

மின்கம்பி அறுந்து விழுந்து 4 மாடுகள் உயிரிழப்பு

சோழவரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தை சோ்ந்த நாகராஜன் என்பவா் ... மேலும் பார்க்க

பழவேற்காடு மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கத் தடை

பிஎஸ்எல்வி ராக்கெட் திங்கள்கிழமை (டிச. 30) விண்ணில் ஏவப்படுவதால், பழவேற்காடு மீனவா்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத் துறையினா் தெரிவித்தனா். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் விண... மேலும் பார்க்க

பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு

பூண்டி ஏரியில் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் 2000 கன அடியாக உபரிநீா் திறப்பு அதிகரித்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்: தரிசனத்துக்கு 4 மணிநேரம்

மாா்கழி மாதத்தையொட்டி திருத்தணி முருகன் மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு... மேலும் பார்க்க