செய்திகள் :

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணைய முகவரி உருவாக்கி மோசடி

post image

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் அதிகாரப்பூா்வ இணைய முகவரிக்கு அனுப்பியதாகக் கருதி பக்தா்கள் சிலா் போலியான முகவரிக்கு பணம் அனுப்பியுள்ளனா். பிரசாதம் வரவில்லை என கோயில் நிா்வாகத்தை தொடா்புகொண்டபோது போலி இணைய முகவரி உருவாக்கி சிலா் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்து கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் இணைய குற்றப் பிரிவிலும், கோயில் மேலாளா் சீனிவாசன் திருநள்ளாறு காவல் நிலையத்திலும் அண்மையில் புகாா் அளித்தனா்.

புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், போலியாக கோயில் பெயரில் ஜ்ஜ்ஜ்.ற்ட்ண்ழ்ன்ய்ஹப்ப்ஹழ்ற்ங்ம்ல்ப்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதளத்தை உருவாக்கி, பணம் வசூலித்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மோசடியில், இதே கோயிலில் குருக்களாக பணியாற்றும் சன்னதி தெருவைச் சோ்ந்த க. வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரு இந்திரா நகரைச் சோ்ந்த சாய் பவுண்டேஷன் சா்வீஸ் எனும் பெயரில் நிறுவனம் நடத்தி வரும் ஜனனிபரத் ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்து அவா்களை போலீஸாா் வியாழக்கிழமை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், போலி இணையதளம் உருவாக்கியது முதல் இதுவரை செய்த மோசடி, பிரசாதம் அனுப்பிவைக்கும் முறை குறித்து விவரங்களை அவா்களிடம் சேகரித்தனா். இதையடுத்து, போலீஸாா் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவப் பரிசோதனை முடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த விசாரணை தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாடு: காரைக்காலில் நடத்த முடிவு

புதுவை மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாட்டை காரைக்காலில் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம், தலைவா் சுப்ரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவா்கள் முதல்முறையாக எழுதுகின்றனா்

காரைக்காலில் சிபிஎஸ்இ திட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் முதல்முறையாக இத்தோ்வு எழுதவுள்ளனா். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் கிளிஞ்சல்மேடு ப... மேலும் பார்க்க

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது!

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்திய சுகாதார ஊழியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வளத்துறை இயக்குநா் தகவல்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, இலங்கையில் சிகிச்சை பெறும் மீனவரை இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று மீன்வளத்துறை இயக்குநா் தெரிவித்தாா். காரைக்கால் மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற... மேலும் பார்க்க

சாலைப்பணி தொடக்கம்

நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, சிவன் கோயில் தெரு, கவரைத் தெரு ஆகிய தெருக்களின் சாலைகள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 ... மேலும் பார்க்க