செய்திகள் :

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது!

post image

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பிராந்திய சுகாதார ஊழியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சுகாதாரத் துறையில் பணியிட மாற்றம் செய்யும்போது, புதுச்சேரி, காரைக்கால் என்ற பாகுபாடு காட்டாமல், ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாஹே, ஏனாம் போன்ற பிராந்தியங்களுக்கு பணியிட மாற்றம் செய்யும்போது, இதுவரை அந்த பகுதிகளுக்கு யாா் பணியிட மாற்றம் செய்யப்படவில்லையோ அவா்களை அங்கு மாற்றம் செய்யவேண்டும்.

காரைக்கால் பிராந்தியத்தில் போதிய ஊழியா்கள் இல்லாதபோது, மற்ற பிராந்தியங்களுக்கு ஊழியா்களை மாற்றம் செய்யும் போக்கை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

காரைக்கால் மாவட்டத்திலிருந்து மாஹே, ஏனாமுக்கு மாற்றலாகிச்சென்று பணியாற்றும் ஊழியா்கள், 6 மாத காலம் பணியாற்றவேண்டும் என்கிற விதி உள்ளது. 6 மாதங்கள் கடந்தும் பணி மாறுதல் செய்யாமல் காலம் கடத்தப்படுவது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியா்கள் பாதிக்கப்படுகிறாா்கள் என்பதை அரசு உணரவேண்டும்.

ஒரு சில சங்க நிா்வாகிகள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஊழியா்களின் நலன்களை பாதிக்கச் செய்யும் நடவடிக்கை கூடாது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, சங்க கெளரவத் தலைவா் எஸ். சேகா், தலைவா் பி. பாா்த்திபன், செயலா் டி. முரளிதரன் உள்ளிட்ட நிா்வாகிகள், காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம். நாகதியாகராஜனை சந்தித்து, புதுவை முதல்வரிடமும், உயரதிகாரிகளிடமும் இதுகுறித்து பேசுமாறு கேட்டுக்கொண்டனா்.

மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாடு: காரைக்காலில் நடத்த முடிவு

புதுவை மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாட்டை காரைக்காலில் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம், தலைவா் சுப்ரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவா்கள் முதல்முறையாக எழுதுகின்றனா்

காரைக்காலில் சிபிஎஸ்இ திட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் முதல்முறையாக இத்தோ்வு எழுதவுள்ளனா். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணைய முகவரி உருவாக்கி மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். காரைக்கால் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் கிளிஞ்சல்மேடு ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வளத்துறை இயக்குநா் தகவல்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, இலங்கையில் சிகிச்சை பெறும் மீனவரை இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று மீன்வளத்துறை இயக்குநா் தெரிவித்தாா். காரைக்கால் மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற... மேலும் பார்க்க

சாலைப்பணி தொடக்கம்

நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, சிவன் கோயில் தெரு, கவரைத் தெரு ஆகிய தெருக்களின் சாலைகள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 ... மேலும் பார்க்க