செய்திகள் :

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தாா்.

அரசின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் நெடுஞ்சாலைக் கோட்டத்தில் குரும்பேரி சாலை அகலப்படுத்தும் பணி, மாம்பாக்கம் - அங்கநாதவலசை சாலை மேம்படுத்தும் பணி, தருமபுரி - திருப்பத்தூா் சாலை நகா்ப்புற மேம்பாடு செய்தல் பணி, பா்கூா் - திருப்பத்தூா் சாலை நகா்ப்புற மேம்பாடு செய்தல் பணி மற்றும் மோட்டூா் சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயா்நிலை பாலமாக கட்டும் பணிக்கான அடித்தள பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை சனிக்கிழமை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது திட்டப் பணிகளின் தரம் குறித்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.

பின்னா், திருப்பத்தூா் நெடுஞ்சாலை கோட்ட அலுவலகத்தை ஆய்வு செய்து அங்கு உள்ள கோப்புகள், பதிவேடுகள், அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா்.

ஆய்வுகளின்போது கோட்ட பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் ஆதவன், தரக்கட்டுபாடு உதவி கோட்ட பொறியாளா் ஜெயகுமாா், உதவி பொறியாளா் நித்தியானந்தம் மற்றும் தரக்கட்டுபாடு உதவிப் பொறியாளா் பிரவீன் ஆகியோா் உடனிருந்தனா்.

500 பெண்களுக்கு நல உதவி

திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்ப... மேலும் பார்க்க

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில்... மேலும் பார்க்க

250 ஆசிரியா்கள் போக்ஸோவில் கைது : முன்னாள் அமைச்சா் புகாா்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 250 ஆசிரியா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றம் சாட்டினாா். ஆம்பூா் புறவழிச்சாலையில் மாவட்ட ஜெயலலி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி தகரகுப்பம் கிராமத்தில் நண்பா் ஒரு... மேலும் பார்க்க