செய்திகள் :

மிசோரம்: ரூ. 66 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

post image

மிசோரம் மாநிலத்தில் ரூ. 66 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மியான்மருடன் இந்திய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிசோரத்தின் சம்பய் மாவட்டம் போதைப் பொருள்கள் கடத்தல் அதிகம் நடக்கும் பகுதியாகும். இங்கு, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் கடந்த சனியன்று (மார்ச். 1) சோகாவ்தார் பகுதியில் ரூ. 60.62 கோடி மதிப்பிலான 20.20 கி அளவுள்ள மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவல்களின்படி சோதனை நடத்தப்பட்ட நிலையில் இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க | தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்

அடுத்ததாக அந்தப் பகுதிக்கு அருகிலேயே ரூ. 6 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர். பாதுகபபுப் படையினரைப் பார்த்ததும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

பிடிபட்ட போதைப் பொருள்கள் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருள்கள் பெரும்பாலும் வங்கதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் மிசோரம், அஸ்ஸாம் வழியாக திரிபுராவிற்கு வருகின்றன.

இந்தியா - வங்கதேசத்தின் குறிப்பிடத்தக்க எல்லைப் பகுதிகள் வேலியிடப்பட்டிருந்தாலும் மியான்மருடனான எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் திறந்த நிலையிலேயே உள்ளது சட்டவிரோத கடத்தல்களுக்கு உதவுகிறது.

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க