செய்திகள் :

``படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்... திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்'' - மணப்பெண் நெகிழ்ச்சி

post image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமானிய குடும்பத்து பெண்ணின் திருமணத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பி வைத்த சம்பவம், மணமக்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த மனோகரன்-முருகேஸ்வரியின் மகள் சோபனா. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சோபனாவுக்கு, வீரமணி கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது.

முதலமைச்சரின் வாழ்த்து

மதுரை பூங்கா முருகன் கோயிலில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய அமைச்சர் பி.மூர்த்தி, கூடவே முதலமைச்சர் அனுப்பி வைத்த வாழ்த்து மடலை மணமக்களிடம் வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அமைச்சர் மூர்த்தி வருகை, முதலமைச்சர் வாழ்த்து என ஆச்சரியங்களுடன் நடைபெற்ற இத்திருமணம் குறித்து விசாரித்தபோது, "திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன் - முருகேஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சோபனா பிளஸ் டூ முடித்தவுடன் அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு பொருளாதார சூழல் இல்லை. அவர்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், தன் உயர் கல்விக் கனவை நனவாக்க தமிழக முதலமைச்சருக்கு  கடிதம் எழுதினார். அது முதலமைச்சரின் கவனத்துக்கு உடனே சென்று அவர் உத்தரவில் மதுரையிலுள்ள அரசு கல்லூரியில் சோபனாவுக்கு உடனே இடம் ஒதுக்கப்பட்டது. அவர் படித்துக்கொண்டிருந்தபோது மதுரைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோபனாவின் குடும்பத்தினரை அழைத்துப் பேசி, அவரின் படிப்புக்குத் தேவையான நூல்களை வழங்கி வாழ்த்தினார்.

மணமக்களிடம் முதலமைச்சரின் வாழ்த்து

கல்லூரிப் படிப்பு முடித்ததும் மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் சோபானாவிற்கு திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து சோபனாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு வர வேண்டுமென்று முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

இந்நிலையில்தான் சோபனா - வீரமணி கார்த்திக் தம்பதியினரின் திருமணத்தை நினைவில் வைத்து அமைச்சர் மூர்த்தி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணமகள் சோபனா, "நான் கல்லூரியில் படிப்பதற்கு உதவி செய்து, வேலையில் சேரவும் வழிகாட்டிய முதலமைச்சர், இப்போது என் திருமணத்திற்கும் வாழ்த்து செய்தியை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பியது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்

அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் பதவி வெறிக்காக ஜெயலலிதா த... மேலும் பார்க்க

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! - ``சர்வதேச சட்ட விதிமீறல்'' - எச்சரிக்கும் ஐ.நா!

இஸ்ரேலுக்கும் - ஹாமஸுக்கும் நடந்து வந்தப் போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்த முதல் கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிந்தது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்ப... மேலும் பார்க்க

``நடிகர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..'' - கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு பாஜக கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சமநிலை நீர்த்தேக்கத்தை செயல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சிகள் தலைமையில் மேகதாது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதயாத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

Doctor Vikatan: என்தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்துஅவளுக்குபெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும்இப்படியேஇருந்துவிட்டால் என்ன செய்வது எ... மேலும் பார்க்க

``2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் ப... மேலும் பார்க்க

``இது மூழ்குகிற கப்பல் இல்லை, கரை சேருகிற கப்பல்'' - தேனியில் ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தேனியில் அதிமுக பொதுக்கூட்டம்..அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "தேனி மாவட்டத்த... மேலும் பார்க்க