செய்திகள் :

``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்

post image

அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஒரணியில் திரள்வது தடுக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்

கட்சி பதவிக்காக கட்சியின் சட்டவிதிகளையே மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசுவதெல்லாம் நரித்தனமாக நயவஞ்சமாக தான் பேசுகிறார். துரோகி என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. மூழ்கிற கப்பல் இல்லை கரை சேருகிற கப்பல் எனப் பேசியிருக்கிறார் என்றால் பழனிசாமி கட்சியை பலவீனப்படுத்தி உள்ளார்.

கட்சி மூழ்குவதால் தானே இதை பேசுகிறார் என புரிந்து கொள்ள வேண்டும். குருட்டு அதிர்ஸ்டம் லாட்டரி சீட்டில் பரிசு கிடைப்பதை போல முதல்வர் பதவி கிடைத்தது அதை பயன்படுத்தி கட்சி பொதுச்செயலாளர் பதவியை கையகப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் சொந்த நலத்திற்காக சுயலாபத்திற்காக, வழக்குகளில் இருந்து திமுக அரசிடம் தன்னை காத்துக்கொள்ள கட்சியை பயன்படுத்திக்கொள்கிறார். இரட்டை இலை சின்னம் இருக்கிறது பணபலம் இருக்கிறது என்பதால் சிலர் வாய்பொத்தி காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

டி.டி.வி தினகரன்

அவர்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பழனிசாமி கட்சியை மூழ்கடித்துவிடுவார். அவருக்கு முன்னே 72, 74, 80, 84-களில் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனவர்கள் கட்சியில் இருக்க இவர் தன்னை சீனியர் எனக் கூறிக்கொள்வது பொய். தவழ்ந்து வந்து பதவி பெற்று தூரேகம் செய்தவருக்கு துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் துரோகத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! - ``சர்வதேச சட்ட விதிமீறல்'' - எச்சரிக்கும் ஐ.நா!

இஸ்ரேலுக்கும் - ஹாமஸுக்கும் நடந்து வந்தப் போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்த முதல் கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிந்தது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்ப... மேலும் பார்க்க

``நடிகர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..'' - கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு பாஜக கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சமநிலை நீர்த்தேக்கத்தை செயல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சிகள் தலைமையில் மேகதாது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதயாத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

Doctor Vikatan: என்தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்துஅவளுக்குபெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும்இப்படியேஇருந்துவிட்டால் என்ன செய்வது எ... மேலும் பார்க்க

``படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்... திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்'' - மணப்பெண் நெகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமானிய குடும்பத்து பெண்ணின் திருமணத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பி வைத்த சம்பவம், மணமக்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த ம... மேலும் பார்க்க

``2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் ப... மேலும் பார்க்க

``இது மூழ்குகிற கப்பல் இல்லை, கரை சேருகிற கப்பல்'' - தேனியில் ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தேனியில் அதிமுக பொதுக்கூட்டம்..அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "தேனி மாவட்டத்த... மேலும் பார்க்க