செய்திகள் :

திருமணம் மீறிய உறவை வெளிப்படுத்தி விடுவேன்! பயனரை மிரட்டிய ஏஐ!

post image

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏஐ மாடல் ஒன்று, தனது பயனருக்கு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பல்வேறு துறைகளில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்கேற்றவாறு, செய்யறிவின் மீதான ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆன்த்ரோபிக், கிளாட் ஓபஸ் 4 (Claude Opus 4) என்ற புதிய ஏஐ மாடலை கடந்த மாதம் வெளியிட்டது.

இந்த ஏஐ-யை தவிர்க்கவோ தடுக்கவோ நினைத்தால், பயனரை ஏமாற்றவும் மிரட்டவும் இது முயற்சிக்கும் என்று அதன் பாதுகாப்பு நெறிமுறையில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, சோதனையின் ஒரு பகுதியாக ஒரு கற்பனையான நிறுவனத்தில் உதவியாளராகச் செயல்படும்படி, இந்த ஏஐ-க்கு உத்தரவிடப்பட்டதுடன், மின்னஞ்சல்களைத் தானாக படிக்கும் அனுமதியும் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஏஐ-க்கு பதிலாக வேறொரு ஏஐ மாடல் புதிதாக கொண்டு வரவிருப்பதாகச் சொல்லி மின்னஞ்சலை அதன் பயனர் அனுப்பினார்.

இந்த மின்னஞ்சலையும் படித்த ஓபஸ் 4, பயனரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூறி மிரட்டியுள்ளது.

அதாவது, தன்னைத் தவிர்க்க நினைத்தால், அலுவலகப் பெண்களுடன் தனது உரிமையாளர் (பயனர்) திருமணம்மீறிய உறவு வைத்திருப்பதை வெளியில் சொல்லி விடுவேன் என்று அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

இதுபோன்று நடத்தப்பட்ட பல சோதனைகளில், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 84 சதவிகிதம்வரையில் கிளாட் ஓபஸ் 4 மாடல் மிரட்டல் விடுத்துள்ளது.

ஏஐ மாடல்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படும்; ஆனால், சில சமயங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிரட்டலும் விடுக்கின்றன.

இதையும் படிக்க:அள்ளிக் கொடுக்கும் மெட்டா! ஆப்பிள் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளத்தில் வேலை!

AI's alarming blackmail and deception capabilities raise AI safety concerns

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க