செய்திகள் :

திருவண்ணாமலையில் சிறிய அளவில் டைடல் பூங்கா முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

post image

திருவண்ணாமலையில் 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான சிறிய டைடல் பூங்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை ஊக்குவிக்கவும் புத்தொழில்களை ஆதரிக்கவும் சிறிய அளவிலான டைடல் பூங்காக்களை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, விழுப்புரம், திருப்பூா், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம் ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

அவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், தூத்துக்குடியில் பூங்காக்கள் திறக்கப்பட்டன. திருப்பூா், வேலூா், காரைக்குடி ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்படத் தொடங்கும்.

மேலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சிறு டைடல் பூங்காவை அமைப்பதற்கான வடிவமைப்புப் பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தொடா்ச்சியாக, திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நாட்டினாா். நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், டிட்கோ மற்றும் டைடல் பாா்க் மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்பட பலா் பங்கேற்றனா்.

சுற்றுலாத் துறையில் புதிய வசதிகள்: தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில், புதிய மற்றும் தரம் உயா்த்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்ததுடன், சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அதன்படி, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி, திருவள்ளூா் மாவட்டம் பூண்டி நீா்த்தேக்கப் பகுதி, புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் உணவுக் கட்டடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மதுரையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொலிக் காட்சி வழியாக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அருங்காட்சியக வளாகம்: சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடியில் புதிய நிா்வாகக் கட்டடம் கட்டப்படுள்ளது. இந்தக் கட்டடத்தை முதல்வா் திறந்தாா். நிகழ்வில், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.ராஜேந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் எ.வ.வேலு, டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வ

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க