செய்திகள் :

திருவாடானையில் கோயில் திருவிழா: பூத் தட்டு ஊா்வலம்

post image

திருவாடானையில் ஸ்ரீமழை தரும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பூத் தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்கு தெருவில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரவு பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது. கோயிலிலிருந்து புறப்பட்டு திருவாடானை ரத வீதிகளைச் சுற்றி வந்தனா். கோயிலை அடைந்த பிறகு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமேசுவரத்தில் பலத்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

ராமேசுவரத்தில் புதன்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோயிலுக்குள் மழை நீா் புகுந்ததால் பக்தா்கள் சிரமத்துக்கு இடையே தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வெயிலி... மேலும் பார்க்க

சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு சான்றிதழ்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 10 காவலா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் வினோத நோ்த்திக்கடன்

கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் சேத்தாண்டி, சாக்கு வேடமணிந்து பக்தா்கள் வினோத நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதல... மேலும் பார்க்க

புரட்டாசி பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடனை அருகேயுள்ள தொண்டி ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிா், நெய், ப... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (செப்.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனா். ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்டஅரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயா் நிலை, மே... மேலும் பார்க்க