செய்திகள் :

திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; சிறுவன் குத்திக் கொலை... கொலையாளிகளைத் தேடும் போலீஸ்!

post image

 கரூர் மாவட்டம், குளித்தலை கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொல்லம் பட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனத்தில் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து சென்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.  பேரளாம்மன் கோயில் தெருவில் வந்தபோது நடனமாடி கொண்டிருந்த சிறுவன் மீது குளித்தலை பெரிய பாலத்தைச் சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சிலர் விழுந்துள்ளனர். அப்போது, அவர்களை ஓரமாக நடனம் ஆடுமாறு சிறுவன் சொன்னதற்கு, நாகேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தை தடுக்க வந்த அஜய், வசந்தகுமார் ஆகிய இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது.

 இதில், படுகாயம் அடைந்த அஜய் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். லேசான காயங்களுடன் வசந்தகுமார் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார் சிறுவனின் உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, இரண்டு தனிப்படைகள் அமைத்து  குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நடிக்க வாய்ப்பு; திருமணம்’ - நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண்

பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் நடிப்பில் சமீபத்தில் ஒ.டி.டி.யில் வெளியான `ஹவுஸ் அரஸ்ட்’ வெப்சீரியஸ் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவுஸ் அரஸ்ட் வெப் சீரியஸ் Ullu App என்ற செயலில் வெளியானது. அதில... மேலும் பார்க்க

`சென்னையில் கொள்ளை… தூத்துக்குடியில் கைது!' - வைர நகை கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரியான இவர், வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி சந்திரசேகரின் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், ரூ.... மேலும் பார்க்க

Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை

மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு ... மேலும் பார்க்க

`தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்' ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர் தப்பிக்க ஆற்றில் குதித்து மரணம்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இம்தியாஸ் அகமது மக்ரே, தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடந்த சனிக்கிழமை மக... மேலும் பார்க்க

``பழைய 5 ரூபாய் நோட்டுக்கு ஒரு கோடி..'' ஆசைகாட்டி துப்புரவு தொழிலாளியிடம் ரூ.18 லட்சம் மோசடி

மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்' என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத... மேலும் பார்க்க

மும்பை: `கார் சதுரங்க வேட்டை' 1375 பேரிடம் ரூ.20 கோடி மோசடி செய்த கும்பல்.. 246 வாகனங்கள் மீட்பு

மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்... மேலும் பார்க்க