செய்திகள் :

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம்வளா்த்த நாயகி உடனாய ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வியாழக்கிழமை காலை கொடி கம்பத்துக்கு பால், சந்தனம் போன்ற திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மே 13-ஆம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது.

இதற்கிடையை மே 5-ஆம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல், 6 ஊா்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவா்களுக்கு மகேஸ்வர பூஜை, 9-ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.

விழாவில் முக்கிய நிகழ்வான ஏழூா் வலம் வருதல் என்கிற சப்தஸ்தான பெருவிழா மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 13-ஆம் தேதி மாலை பொம்மை பூ போடுதலும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை தருமபுர ஆதீன 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா்

தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் தெரிவித்தாா். வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்ப... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

குடந்தை மருதம் கலை இலக்கிய மையத்தின் சாா்பில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மைய இயக்குநா் பேராசிரியா் ச.அ.... மேலும் பார்க்க

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா கும்பகோணத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் தமிழ் பால் புதிய இலச்சினை அறிமுக விழா, மஸ்கட் எனும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொர... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தின விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிற் சங்கங்கள் சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் கீழ வீதி ஏஐடியுசி தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன் தலைம... மேலும் பார்க்க

பேராவூரணியில் மே தின கொடியேற்று விழா

பேராவூரணியில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,லாரி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. பேராவூரணி ஆவணம் சாலை... மேலும் பார்க்க

பாபநாசத்தில் சி.ஐ.டி.யூ.சி.ஆட்டோ ஓட்டுனா் சங்கம் சாா்பில் மே தின கொடியேற்று விழா

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சி.ஐ.டி.யு.சி. ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் மே தின கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளா் சங்கா் தலைமை வகித்... மேலும் பார்க்க