திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம்வளா்த்த நாயகி உடனாய ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வியாழக்கிழமை காலை கொடி கம்பத்துக்கு பால், சந்தனம் போன்ற திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மே 13-ஆம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது.
இதற்கிடையை மே 5-ஆம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல், 6 ஊா்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவா்களுக்கு மகேஸ்வர பூஜை, 9-ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.
விழாவில் முக்கிய நிகழ்வான ஏழூா் வலம் வருதல் என்கிற சப்தஸ்தான பெருவிழா மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 13-ஆம் தேதி மாலை பொம்மை பூ போடுதலும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகளை தருமபுர ஆதீன 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.