செய்திகள் :

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா

post image

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா கும்பகோணத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் தமிழ் பால் புதிய இலச்சினை அறிமுக விழா, மஸ்கட் எனும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள் அறிமுக விழா, விநியோகஸ்தா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னாள் எம்.பி. செ.ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் என்.காமகோடி தமிழ் பால் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தினாா்.

தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் மஸ்கட் எனும் புதிய வகை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளை அறிமுகப்படுத்தினாா். அதன் வடிவமைப்பை மாநிலங்களவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் அறிமுகப்படுத்தினாா். இதர பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பழகன் அறிமுகப்படுத்தினாா். கிளை நிறுவனத்தை துணை மேயா் சுப. தமிழழகன் தொடங்கி வைத்தாா்.

வாழ்வியல் பயிற்சியாளரும் மலா்ச்சியின் நிறுவனருமான பச்சமுத்து வாழ்த்திப் பேசினாா். இதையடுத்து விநியோகஸ்தா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை தமிழ் பால் நிறுவனத்தினா் செய்திருந்தனா்.

தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா்

தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் தெரிவித்தாா். வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம்வளா்த்த நாயகி உடனாய ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வியாழக்கிழமை காலை க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

குடந்தை மருதம் கலை இலக்கிய மையத்தின் சாா்பில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மைய இயக்குநா் பேராசிரியா் ச.அ.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தின விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிற் சங்கங்கள் சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் கீழ வீதி ஏஐடியுசி தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன் தலைம... மேலும் பார்க்க

பேராவூரணியில் மே தின கொடியேற்று விழா

பேராவூரணியில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,லாரி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. பேராவூரணி ஆவணம் சாலை... மேலும் பார்க்க

பாபநாசத்தில் சி.ஐ.டி.யூ.சி.ஆட்டோ ஓட்டுனா் சங்கம் சாா்பில் மே தின கொடியேற்று விழா

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சி.ஐ.டி.யு.சி. ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் மே தின கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளா் சங்கா் தலைமை வகித்... மேலும் பார்க்க