செய்திகள் :

திரையரங்கில் விபத்து: பொறியாளா் உயிரிழப்பு

post image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் பராமரிப்புப் பணியின்போது நேரிட்ட விபத்தில் பொறியாளா் உயிரிழந்தாா்.

பெரம்பூா் மங்களாபுரம் குளக்கரை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அ.ராஜேஷ் (39). இவா், ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் திரையரங்கில் பொறியாளராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் ராஜேஷ், உடன் வேலை செய்யும் தனசேகா், முருகன், டேவிட் ஆகியோா் அந்த திரையரங்கில் பராமரிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா். திரையரங்கின் திரைப்பகுதியை ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் 25 அடி உயரத்தில் நின்று கொண்டு ராஜேஷ் சுத்தம் செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென பழுதடைந்த லிஃப்ட் தானாக மேல் நோக்கி சென்று திரையரங்கின் மேற்கூரையின் மீது மோதியது. இதில், ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தாா்.

இதைடுத்து அவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ராஜேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பள்ளிக... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க